உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழா

பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழா

பேரம்பாக்கம் : பொங்கல் பண்டிகையை ஒட்டி, பேரம்பாக்கத்தில், நேற்று முன்தினம் பார் வேட்டைநடந்தது. திருவள்ளூர் அடுத்த, பேரம்பாக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று, கூவம் ஆற்றுங்கரையோரம் பார் வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, பார் வேட்டை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரம்பாக்கத்தில் இருந்து, பாலமுருகன், காசி விஸ்வநாதர், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து, வேங்கட பெருமாள் ஆகிய உற்சவர்கள் வந்தனர். அதை தொடர்ந்து, சிவபுரம் கிராமத்தில் இருந்து விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து வள்ளலார், மாரியம்மன் என, மொத்தம், ஒன்பது உற்சவர்கள், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரே இடத்தில் கூடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கடம்பத்துார், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உட்பட, 10க்கும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வந்திருந்தனர், பின், அந்தந்த கிராமங்களில் உற்சவர்களின் வீதிஉலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !