பிரதமை அன்று யாரை வணங்கலாம்?
ADDED :3517 days ago
சிவபெருமானை வழிபட்ட பலன் பூர்ணமாக நமக்கு கிடைக்க சண்டிகேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. தொலைந்த பொருட்களைத் திரும்பக் கிடைக்கச் செய்யும் மூர்த்தியும் இவரே. சுபநிகழ்ச்சிகள் நடத்தவும், பயணம் புறப்படவும் பிரதமை மற்றும் நவமி திதிகளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் இந்நாட்களில் அவசிய பயணம் செய்ய வேண்டியிருந்தால், சண்டிகேஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபட்ட பின் புறப்படலாம். கிழமைகளில் புதன் இவருக்கு உகந்தது.