காரைக்கால் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3204 days ago
காரைக்கால்: காரைக்காலில் சித்தி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் ஆலய ஜீர்ணோத்தாரண புணராவர்த்தன கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம்,நவகிரஹ பூஜை, தனபூஜைகளுடன் துவங்கியது. கடந்த 31ம் தேதி காரைக்கால் அம்மையார் திருக்குளம் சந்திரபுஷ்கரணியில் ஆச்சார்ய விசேஷசந்தி தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜைகள் தொடங்கப்பட்டது. இன்று 4ம் கால யாகபூஜைகள் முடிவடைந்து கடங்கள் புறப்பாடுகளுடன் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தி விநாயகரை வழிப்பட்டனர்.