சென்னிமலைபாளையத்தில் கும்பாபிஷேக விழா: பக்தர்கள் குவிந்தனர்
ADDED :3360 days ago
பெருந்துறை: பெருந்துறை அருகே, கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பெருந்துறை அருகே, சென்னிமலைபாளையத்தில் விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. சிவராம குருக்கள் தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.