அரூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3165 days ago
அரூர்: பிரதோஷத்தை முன்னிட்டு, அரூரில் உள்ள சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். அரூர், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, வர்ணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழாவில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள, வாணீஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாட்டில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.