சாஸ்தா கோயிலில் பொங்கல் விழா
ADDED :3452 days ago
சாயல்குடி, சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் சாஸ்தா கோயிலில் பொங்கல் விழா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.