செம்பை பார்த்தசாரதி ஏகாதசி சங்கீத உற்சவத்தில் பஞ்சரத்ன கீர்த்தனம்
ADDED :3436 days ago
பாலக்காடு: பாலக்காடு அருகே, கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில், ஏகாதசி சங்கீத உற்சவம் மார்.5ல் துவங்கியது. கர்நாடக இசை மேதை செம்பை வைத்தியநாத பாகவதரால் துவக்கப்பட்ட இந்த சங்கீத உற்சவத்தை, அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். திருவிழாவையொட்டி நடக்கும் சங்கீத உற்சவத்தின் இறுதி நாளான இன்று (8ம்தேதி)காலை பஞ்சரத்ன கீர்த்தனம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.