காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3163 days ago
பல்லடம்: சித்தம்பலத்தில் உள்ள, காமாட்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபி ஷேக விழா நடை பெற்றது.கோவை காமாட்சிபுரி ஆதீனம், நவக்கிரக கோட்டை ஞானகுரு ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி களால், கும்பாபிஷேக விழா சிறப்புற நடத்தி வைக்கப்பட்டது. அதன்பின், மகாதரிசனம், அபி ஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன. திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.