உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

மயிலம் முருகர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், விநாயகர், மூலவர், நவகிரக சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு மலையடிவாரத்திலுள்ள அக்னி தீர்த்த குளத்தில் நடராஜர், வள்ளி,தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு மகா தீர்த்தவாரி நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு நடந்த மகா தீபாரதனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயி லம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !