உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

நகரி: நகரி மற்றும் புத்துார் பகுதிகளில் உள்ள சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. சித்துார் மாவட்டம், நகரி மற்றும் புத்துார் பகுதிகளில் உள்ள திவ்யதாமம் சாய்பாபா கோவிலில், மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலையில் சேஜ் ஆரத்தி மற்றும் பஜனை குழுவினரால் சாய்பாபா கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதில், நகரி, புத்துார் உட்பட, அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து, பாபாவை வழிபட்டனர். இதே போல், நகரி டவுன் பேரி வீதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !