மேல்மலையனுார் கோவிலில் ரூ.62.75 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :3150 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 62 லட்சத்து 75 ஆயிரத்து 701 ரூபாயை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி மாத திருவிழாவை முன்னிட்டு, 21 மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில், உண்டியல் பணம் எண்ணும் பணி நடந்தது. மொத்தம் 62 லட்சத்து 75 ஆயிரத்து 701 ரூபாய், தங்க நகை 287 கிராம், வெள்ளி பொருட்கள் 846 கிராம் இருந்தன. அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.