உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீபெரும்புதுார்: திருவாதிரை திரு நட்சத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு நேற்று விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்­களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு, மாதம்தோறும் திருவாதிரை திருநட்சத்திரம் அன்று ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடத்தப்­படுகிறது. நேற்று, திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமானுஜர் உற்சவருக்கு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் செய்யப்­பட்டது. இதில் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்­பட்ட பக்தர்­கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !