தேவாரம் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா
ADDED :3146 days ago
தேவாரம், தேவாரம் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாளில் கரகம் எடுத்து பொங்கல் வைப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாவிளக்கு, முளைப்பாரிகளுடன் அம்மன் நகர்வலம் வந்தது. மஞ்சள் நீராட்டுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.ஏற்பாடுகளை தேவாரம் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.