உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே,  புதுப்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி,  நேற்று, அலகு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், கோவிலில்,  நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பொங்கல்  வைத்தும், உருளுதண்டம் போட்டும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.  மாலை, 5:00 மணிக்கு மேல், சின்னகிருஷ்ணாபுரம்  பெரியகிருஷ்ணாபுரம், மத்தூர், வாழப்பாடி, கொட்டவாடி,
வைத்தியகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து, பல்வேறு  அலகுகுத்தியும், தீச்சட்டி, பூங்கரகம் எடுத்தும், ஏராளமான பக்தர்கள்  ஊர்வலம் வந்தனர். இன்று மாலை, 4:00 மணிக்கு மேல், தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !