உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மழை வேண்டி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

ஈரோடு: ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு சைவமாரியம்மன்  கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயம் பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, மழை பெய்ய வேண்டி, கோவில்  நிர்வாகம் சார்பாக, யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை,  புண்யாகமம், சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில்,  பூர்ணாஹூதி, சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !