உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பா ஆசிரமத்தில் சித்திரை விஷூ கனி தரிசனம்

ஐயப்பா ஆசிரமத்தில் சித்திரை விஷூ கனி தரிசனம்

சூரமங்கலம்: ஐயப்பா ஆசிரமத்தில், விஷூ கனி தரிசனம் நடந்தது.  தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, சேலம் - பெங்களூரு பைபாஸ்  சாலையில், குரங்குச்சாவடி அருகே உள்ள ஐயப்பா ஆசிரமத்தில்,  நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம்
நடந்தது. 5:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு, அபிஷேகம், கனி  தரிசன மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு  பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழை பூஜை, பக்தர்களுக்கு கனி வழங்குதல், 10:00 மணிக்கு ஹரிவராசனம் நடந்து, நடை சாத்தப்பட்டது. இதில், காலை முதலே, ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சித்திரை விஷூ கனி தரிசனம் முன்னிட்டு, கோவில் கருவறையைச் சுற்றிலும், பல்வேறு வகை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !