உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறு திருநாமங்கள்!

பதினாறு திருநாமங்கள்!

மகாவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.

மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு
உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன்
படுக்கச் செல்லும்போது -  பத்மாநபன்
திருமணத்தின்போது - பிரஜாபதி
யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி
வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன்
நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன்
கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன்
கஷ்டம் வரும்போது - மதுசூதனன்
காடுகளில் செல்லும்போது - நரசிம்மன்
நெருப்பால் கஷ்டம் வரும்போது - மஹாவிஷ்ணு
தண்ணீரால் கஷ்டம் வந்தால் - வராகன்
மலையின் மேல் ஏறும்போது - ராமன்
நடக்கும் போது - வாமனன்
இறக்கும் நிலையில் - நாராயணன்
எல்லா சமயங்களிலும் - மாதவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !