உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை

ஸ்ரீமுஷ்ணம்:  ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. பிரசித்திபெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மூன்றாம் நாள் உற்சவம் நேற்று இரவு நடந்தது.  இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக 8ம் தேதி காலை தேர்திருவிழாவும், 10ம்தேதி மதியம் மட்டையடி உற்சவமும் இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 11ம்தேதி இரவு கொடியிறக்கம் நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !