காவல்காரப் பெருமாள்
ADDED :5259 days ago
முருகப்பெருமான் பகைவனுக்கும் வாழ்வு தந்து ஆட் கொள்ளும் அருள் உள்ளம் படைத்தவர். மாமரமாய் மாறி நின்ற சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டவர். கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர், முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் என்று இவருடைய பெருமையைப் போற்றுகிறார். போற்றினாலும், நிந்தித்தாலும் நினைத்தது என்னைத் தானே என்ற அடிப்படையில் பக்தர்களுக்கு அருளை வழங்குபவர். முருகனைச் சரணடைந்தால் அவன் காவல்காரனாக நின்று நம்மைக் காத்தருள்வான் என்பதை திருப்புகழில், தொழுது வழிபடும் அடியவர் காவல்காரப்பெருமாளே, என்று போற்றியுள்ளார்.