உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்

திருநள்ளார் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி தீவிரம்

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி 5 தேர் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 28ம் தேதி இரவு அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கு, கடந்த 29ம்தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளல்,2ம் தேதி இன்று பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி காலை 5.40 மணிக்கு மேல் செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது.தேர் திருவிழாவிற்காக 5 தேர் தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த செட் அகற்றப்பட்டு தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !