உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாள் மண்டல பூஜை நடத்துவது ஏன்?

கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாள் மண்டல பூஜை நடத்துவது ஏன்?

கும்பாபிஷேகம் முதல் மூன்று பட்சம், சிறப்பு பூஜை செய்ய வேண்டும். ஒரு பட்சத்திற்கு 15 நாள் என்பதால் 45 நாள். ஆனால், 48 நாள் என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. கருவறைக்கு எழுந்தருளி இருக்கும் இறைவனின் தெய்வீக சக்தியை நிலைநிறுத்தவும், அஷ்ட பந்தன மருந்து இறுகவும் மண்டல பூஜை நடத்தப்படுகிறது.  இக்காலத்தில் எண்ணெய், பால், பன்னீரில்  மட்டும் அபிஷேகம் செய்யலாம். அஷ்டபந்தன மருந்து இறுகச் செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !