உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-10: உதவும் பண்பை வளர்ப்போம்

ரமலான் சிந்தனைகள்-10: உதவும் பண்பை வளர்ப்போம்

ஒருசமயம் நபிகள் நாயகம் மக்கள் மத்தியில் பேசும் போது, “மனிதன் கியாமநாளில் இறைவன் முன் நிறுத்தப்படுவான். அப்போது இறைவன் அவனைப் பார்த்து நான் நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? என்பான். அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? என்றார். உடனே ஒருவர்,“இறைவன் அப்படிக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் தலைவன் நீ. உன்னை நோய் எப்படி தாக்கும்? அப்படி இருக்கையில் எங்களைக் குறை சொல்வது நியாயமா? எனக்கேட்பேன்,” என்றார். அதற்கு நாயகம், “ஒரு மனிதனின் பெயரை இறைவன் குறிப்பிட்டு, அவன் நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தது உனக்குத் தெரியாதா? நீ ஏன் அவனுக்கு ஆறுதல் சொல்ல செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால், அவனிடத்தில் என்னைப் பார்த்திருப்பாயே! என்பான். அதற்கு நீ என்ன பதில் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். கேள்வி கேட்டவர் தலை குனிந்தார். உடனே நாயகம்,“எல்லோரையும் நம் சகோதரர்களாகக் கருதி அவர்களுக்கு உதவ வேண்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு, என்றார். மற்றவர்களுக்கு உதவும் பண்பை வளர்க்க வேண்டும் என்பதை இந்த உரை எடுத்துக்காட்டுகிறது.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !