திருவண்ணாமலையில் விரைவில் தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED :3377 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட காரணத்தால் நேற்று பெளர்ணமி நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் இருந்தது. கூட்டம் குறைவாக இருந்ததால் விரைவில் ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.