சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3008 days ago
ஆத்தூர்: சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று, காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், தேன் உள்பட, பல்வேறு அபிஷேகம் நடந்தது. ரிஷப வாகனத்தில், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனை, கோவிலை சுற்றி, பக்தர்கள் ஊர்வலம் கொண்டுவந்தனர். நந்தி பகவான், காயநிர்மலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர் ஆகிய கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.