ஷீரடி சாய்பாபாவிற்கு 108 லிட்டர் பாலாபிஷேகம்
திருவள்ளூர்:திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சிலைக்கு பாலாபிஷேகம் நடந்தது.திருவள்ளூர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சாய்பாபா சன்னதியில், நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தெற்கு குளக்கரை தெருவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்தில், தீபோற்சவம் நடந்தது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று முன்தினம் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.