மூலஸ்தம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
ADDED :2986 days ago
முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை ஸ்ரீமூலஸ்தம்மன் கோவிலில், 17வது ஆண்டு ஆடித்திருவிழா, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. முத்தியால்பேட்டை கீழத் தெ ருவில், ஸ்ரீமூலஸ்தம்மன் கோவிலில், 17வது ஆண்டு ஆடித்திருவிழா நேற்று வெகு விமரிசை யாக நடந்தது. ஆடித்திருவிழா முன்னிட்டு, 4ம் தேதி கசத்துமேடு பகுதியில், அம்மன் ஊர்வலம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் காலை , 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைபகல் , 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, மூலஸ்தம்மன் சர்ப அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்தார். சிறப்பு வாண வேடிக்கை நடந்தது.