மீனாட்சிபுரத்தில் சித்தருக்கு படையல்
ADDED :3105 days ago
மேலுார்: மேலுார் அருகே மீனாட்சிபுரத்தில், 18 சித்தர்களில் முதல்வராக கருதப்படும் காகபூசிந்த ரிஷி சித்தர் ஜீவசமாதி உள்ளது. கடந்த 15 நாட்களாக ஆண் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நிறைவு நாளான நேற்று மேலுாரில் இருந்து வாழைப்பழங்களை தலையில் சுமந்து சென்று படையல் இட்டனர். ஆண் பக்தர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்வர்.