கோட்டை மாரியம்மன் திருவிழா: நாளை உள்ளூர் விடுமுறை
ADDED :2983 days ago
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, நாளை, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்டை மாரியம்மன் திருவிழாவை காண ஏதுவாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, ஆக., 9ல், உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவசர அலுவல் பணிகளை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும், குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும். உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக, வரும், 19ல், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.