உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு

வல்லப கணபதியாக ராஜகணபதி அருள்பாலிப்பு

சேலம்: வல்லப கணபதியாக, ராஜகணபதி அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தி விழா, சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், கடந்த, 23ல் தொடங்கியது. அன்று முதல், தினமும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடக்கிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, வல்லபகணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. கோவில் எதிரே, பிரத்யேகமாக மேடையில், கணபதிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !