உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி கோவிலில் 108 லிட்டர் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி கோவிலில் 108 லிட்டர் பாலாபிஷேகம்

திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத செவ்வாய் கிழமை ஒட்டி மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்தூர் கிராமத்தில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத செவ்வாய்கிழமை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு காலையில், 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல் மாலை, 4:30 வரை ராகுகால பூஜையும் நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருத்தணி, மத்தூர், புச்சிரெட்டிப் பள்ளி, பொன்பாடி உட்பட அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல், ஆடி மாதம் ஒட்டி அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !