உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவிலில் பிரதோஷ வழிபாடு

வால்பாறை கோவிலில் பிரதோஷ வழிபாடு

வால்பாறை: வால்பாறை கோவிலில் நடந்த  பிரதோஷ வழிபாட்டில், சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்­ளது. கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை , 5:30 மணிக்கு, சிவலிங்கத்திற்கு சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான  அபிேஷகம் நடந்தது. அதன்பின் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !