திருமாலுக்கு தசாவதாரம் போல, சிவனுக்கு அவதாரம் இல்லையா?
ADDED :2921 days ago
அவதாரம் என்பது தன் நிலையிருந்து கீழிறங்கி உதவுதல். சரபேஸ்வரர், பைரவர், கங்காதரர், தட்சிணாமூர்த்தி என சிவனுக்கும் வடிவங்கள் உள்ளன. திருமால் மனிதனாக பிறந்ததால் அவதாரம் என குறிப்பிடப்படுகிறார். சிவன் பிறப்பு இல்லாமல் நேரடியாக தோன்றுவதால் அவதாரம் எனச் சொல்வதில்லை.