ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ரத்தின அபயஹஸ்தம் அணிந்து நம்பெருமாள் சேவை
ADDED :3174 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் 8ம் திருநாளில் நம்பெருமாள் ஆண்டாள் முத்துசாயக் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், வெள்ளை மகராண்டி உள்ளிட்டஆபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.