சேலம் ராஜ அலங்காரத்தில் கோட்டை அழகிரிநாதர்
ADDED :2842 days ago
சேலம்: அழகிரிநாதர், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. பகல் பத்து உற்சவத்தின், எட்டாவது நாளான நேற்று, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு, சிறப்பு அதிகாலை பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அழகரிநாதருக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர். வரும், 28ல், பகல் பத்து உற்சவம் நிறைவடைகிறது. 29ல், சொர்க்க வாசல் திறப்புடன் தொடங்கும் ராப்பத்து உற்சவம், ஜன., 9ல் நிறைவடைகிறது.