உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடுகின்றானடி தில்லையிலே! அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே!

ஆடுகின்றானடி தில்லையிலே! அதை பாட வந்தேன் அவன் எல்லையிலே!

 ஆருத்ரா தரிசனமான இன்று நடராஜரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் தரப்பட்டுள்ளது. இதைப் படித்தால் நன்மை உண்டாகும்.

● பிரகாசம் மிக்க சபையில் நடனமாடும் ஈசனே! தில்லை நடராஜனே! தில்லை நகர், தீட்சிதர்களால் பூஜிக்கப்படுபவனே! காலனை உதைத்தவனே! பக்தர்களை காக்க, சூலம் ஏந்தியவனே! கருணை மிக்கவனே! மனக்கவலை தீர்ப்பவனே! சித்திர சபையின் நாயகனே! எங்களுக்கு ஆரோக்கிய வாழ்வை அளித்தருள வேண்டும்.

● நெற்றிக் கண் கொண்டவனே! பதஞ்சலி, வியாக்ரபாதருக்கு நடன காட்சி அளித்தவனே! கோவிந்தராஜ பெருமாளை தோழனாகப் பெற்றவனே! புலித்தோலை ஆடையாக உடுத்தியவனே! பவானி என்னும் சிவகாமி அன்னையை மணந்தவனே! ஆடலில் வல்லவனே! உன் திருவடியை சரணடைந்த எங்களுக்கு செல்வ வளம் தந்தருள வேண்டும்.

● மன்மதனை எரித்தவனே! பாம்பை அணிகலனாகச் சூடியவனே! வேதத்தின் சாரமாகத் திகழ்பவனே! ஜடாமுடி தரித்தவனே! திருவாதிரை அபிஷேகத்தில் மகிழ்பவனே! நந்திகேஸ்வரருடன் திருநடனம் புரிபவனே! உன் தாமரைப் பாதத்தில் தஞ்சம் அடைந்து விட்டோம். உன் அருளால் எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க வேண்டும்.

● பாவம் போக்குபவனே! பார்வதியுடன் விளையாடி களிப்பவனே! வேத வித்தகனே! விரும்பும் வரங்களை அளிப்பவனே! திருநீறு, ருத்ராட்ச மாலை அணிந்தவர்களை காப்பவனே! மாணிக்க வாசகருக்கு அருள்புரிந்தவனே! உன் அருளால் இந்த உலகிலுள்ள உயிர்கள் எல்லாம், இன்புற்று வாழ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !