திருவள்ளூர் குரு பகவானுக்கு பாலாபிஷேகம்
                              ADDED :2815 days ago 
                            
                          
                          திருவள்ளூர்: திருவள்ளூர் தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், குரு பகவானுக்கு உகந்த நாளான நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. திருப்பாச்சூர், தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு, நேற்று மாலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.திருவள்ளூர் திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்குக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திருவள்ளூர், காக்களூர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.