சென்றாய பெருமாள் கோவிலில் வெள்ளி கவசத்தில் ஆஞ்சநேயர்
ADDED :2990 days ago
காளிப்பட்டி: மாசி மாத முதல் ஞாயிறு முன்னிட்டு, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறமுள்ள சென்றாய பெருமாள் கோவிலில், வீரபக்த ஆஞ்சநேயருக்கு, நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. அதில், வெவ்வேறு காலகட்டங்களில், பக்தர்களால் வழங்கப்பட்ட வெள்ளிக்கவசத்தை முழுதும் சேர்த்து, ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது. பின், 16 வகை மங்கள பொருட்களால் அபி?ஷகம் நடந்தது.