உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

மாசி பவுர்ணமி: தி.மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர்.. மாசி மாத பவுர்ணமி, நேற்று காலை, 8:44 மணிக்கு துவங்கியது. இன்று காலை, 7:00 மணி வரை பவுர்ணமி உள்ளது. நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !