சின்மாயா கணதீஷ்!
ADDED :2935 days ago
பெங்களூரு -புனே நெடுஞ்சாலையில் கோலாப்பூரில் இருந்து 14 கி.மீ.யில் சம்பாபூர் என்னும் கிராமத்தில் மிக உயரமான விநாயகர் சிலை உள்ளது. இவரை ‘சின்மயா கணதீஷ்’ என்று அழைக்கின்றனர். திறந்தவெளியில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க 100 அடி உயரம், 60 அடி அகலத்தில் சிமென்ட்டில் உருவான இச்சிலையை நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே தரிசிக்கலாம் என்பது சிறப்பு!