உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கோலாகலம்

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கோலாகலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, போடிபாளையம் - குளத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில், பூமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

போடிபாளையம், குளத்துார் பத்ரகாளியம்மன் கோவில் பூமிதி திருவிழா கடந்த, 19ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. திரவுபதியம்மன், தர்மராஜா ஆலயத்தீர்த்தம் கொண்டு வந்து அம்மன் கொலு வைத்தல், கொடி மரம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து, ஏப்., 3ம் தேதி, அம்மன் சப்பரம் ஊர்வலம், மாலை, 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பு, இரவு, 9:00 மணிக்கு பூ வளர்த்தல், வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (ஏப்.,4ல்) காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும், 6ம் தேதி மகா அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !