சுந்தரவள்ளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
ADDED :3060 days ago
மேலுார், மேலுார் அருகே கீழையூர் சுந்தரவள்ளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டுமுளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மார்ச் 27 திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுளைப்பாரி ஊர்வலம், கரைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கீழையூர், கீழவளவு சுற்றியுள்ள பகுதியினர் பங்கேற்றனர். இரவு சாமியாட்டம் நடந்தது. ஏப்., 7சக்தி விநாயகர் கோயிலில் இருந்து சுவாமி ஊர்வலமாக மந்தைக்கு வரும்நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 10 மந்தையில் இருந்து கோயிலுக்கு சாமி திரும்புவதுடன் விழா நிறைவடைகிறது.