உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர்:திருப்போரூர், கந்தசுவாமி கோவில், சித்திரை மாத வசந்த உற்சவ விழா நிறைவாக, இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில் வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அது போல், நடப்பாண்டிற்கான விழா, கடந்த, 26ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்று, பின் மீண்டும் கோவிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்று வந்தது. விழாவின், இறுதி நாளான இன்று கந்தசுவாமி பெருமான் வள்ளி, தெய்வானையை மணம் முடிக்கும் வைபவம் நடைபெறும். பின், சுவாமி யின் வீதியுலாவும் நடைபெறும். வசந்த மண்டபத்தில் இன்று இரவு நடைபெறும் இத்திருக்கல்யாண உற்சவத்துடன், வசந்த உற்சவ விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !