இல்லோடு விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
ADDED :2712 days ago
செஞ்சி: இல்லோடு வலம்புரி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது. செஞ்சி தாலுகா, இல்லோடு கிராமத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 :00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9:00 மணிக்கு கலச பிரதிஷ்டையும், கணபதி ஹோமமும், 11 :00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து விநாயகருக்கு கலசாபிஷேகமும் நடந்தது. பகல் 12 :00 மணிக்கு மகா தீபாராதைனை நடந்தது. மதியம் அன்னதாமும், இரவு செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலாவும் நடந்தது.