பூச்சொரிதலுடன் துவங்கியது மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :2712 days ago
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு, பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், அம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை, அலங்காரம் செய்து வண்டிகளில் வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதில் லாலாப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.