ஜூலை 5ல் சமஷ்டி உபநயனம்
ADDED :2955 days ago
மதுரை: திருச்சி பிராமண இளைஞர் சங்கம் சார்பில் ஜூலை 5ல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு சிருங்கேரி ஸ்ரீவித்யாபாரதி பவனம் கல்யாண மண்டபத்தில் 34ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் நடக்கிறது. இதில் 25 சிறுவர்களுக்கு உபநயனம் செய்யப்படும். இச்சங்கம் சார்பில் இதுவரை 664 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது. குறைந்த இடமே உள்ளதால் உபநயனத்திற்கு இன்றைக்குள் முன்பதிவு செய்யவும். நன்கொடை வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு செயலாளர் கே.சீதாராமனை 98424- 07979ல் தொடர்பு கொள்ளலாம்.