மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்
ADDED :2755 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, நார்த்தம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 23ல் விழா தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடந்தது. 24ல், சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று, பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல் நடந்தது. இதேபோல், காந்திநகர் முத்துமாரியம்மன் கோவிலில், 24ல், சக்திகரகம் அழைத்தல், கூழ் ஊற்றுதல் நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபி?ஷக அலங்காரம் நடந்தது.