பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் பால்குடம்
ADDED :2626 days ago
கும்மிடிப்பூண்டி: பூவலை அய்யர் தோட்டத்தில் அமைந்துள்ள, யக்ஞ சீதளா மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் அருகே, பூவலை கிராமத்தில் உள்ள அய்யர் தோட்டத்தில், யக்ஞ சீதளா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, இந்த கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பூவலை பெருமாள் பஜனை கோவிலில் இருந்து, 200க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின், கூழ் வார்த்தல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.