திருப்பதி பெருமாள் படத்தை தனியாக பூஜையறையில் வைக்கலாமா?
ADDED :2665 days ago
தாயாரைப் (ஸ்ரீதேவி) பிரிந்து திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் எப்போதும் இருப்பதில்லை. சுவாமியின் மார்பில் லட்சுமி தாயார் நித்யவாசம் செய்கிறாள். அதனால், திருப்பதி பெருமாளை வணங்குபவருக்கு ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று சொல்லும் படி நல்வாழ்வு அமைவது உறுதி.