செல்லாண்டியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலம்
ADDED :2663 days ago
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், ஜங்களாபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிப் பண்டிகை கடந்த வாரம் தொடங்கியது. நேற்று, தேர்த்திருவிழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் இவைகளைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். தேங்காய், வாழைப்பழ தட்டுகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக, சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.