பரனுார் ராதிகாரமண பக்தகோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார்‚ ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு, கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த பரனுார் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவில்‚ ஜெயந்தி பிரம்மோத்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. 
காலை 9:00 மணிக்கு‚ ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில்‚ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம்‚ சுவாமி வீதியுலா நடந்தது. இரவு அனுமந்த வாகனத்தில் ராதிகாரமன பக்த கோலாகலன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் தேதி காலை ராதிகாரமண பக்த கோலாகலன் திருக்கல்யாண வைபவமும், 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுளை செய்து வருகின்றனர்.